Site icon Tamil News

சுவிட்ஸர்லாந்தில் ஒரே நாளில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

சுவிட்ஸர்லாந்தின் சூரிச்சில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இரு விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்று Place de la Gare அருகே மற்றொன்று Altstetten district மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை, இரவு 7 மணி அளவில் சூரிச்சில் உள்ள Place de la Gare நோக்கிச் சென்ற டிராம் ஒன்றின் கீழ் சென்ற பாதசாரி ஒருவர் தனது உயிரை இழந்தார்.

விபத்தில் சிக்கியவரை காப்பா்ற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவரது காயங்கள் மிகவும் கடுமையாக இருந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்தையடுத்து போக்குவரத்து முற்றாக முடங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து சூரிச் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மற்றும் நம் அனைவரையும் வருத்தப்பட வைத்துவிட்டதென சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சற்று முன் மற்றொரு டிராம் விபத்து ஏற்பட்டது. Altstetten இல் உள்ள Aargauerstrasse இல் 27 வயது சைக்கிள் ஓட்டுநர் விபத்துக்குள்ளானார்.

இதில் அந்த இளைஞன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில் சனிக்கிழமை காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Exit mobile version