Site icon Tamil News

கேரட்டால் ஒன்றரை வயது குழந்தையின் உயிர் பறிபோனது

கேரட் துண்டு தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாலியவெவ யாய ஹத்தாவில் வசித்து வந்த சவின் துல்சந்த உபாத்யாய் என்ற ஒரு வயது மற்றும் ஏழு மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.

நேற்று (11) பிற்பகல் வீட்டில் இருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்த பெற்றோர், அம்புலன்ஸ் சேவையின் ஊடாக குழந்தையை நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

Exit mobile version