Site icon Tamil News

உபுல் தரங்கா தலைமையிலான புதிய தேர்வுக் குழு

புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு நியமிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (04) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதன்போது பேசிய அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்க தலைமையில் தேர்வுக் குழு நியமிக்கப்படும் என்றார்.

மேலும், கிரிக்கெட் மற்றும் விளையாட்டை மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், கிரிக்கெட் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version