Site icon Tamil News

பிரித்தானிய விமான நிலையத்தில் அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் புதிய விதி!

பிரித்தானிய விமான நிலையங்களில் கடுமையான திரவ விதிகளில் மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விடுமுறைக்கு வருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் திரவ விதிகள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ளது. இது 100 ml வரை மாத்திரமே கொண்டுவர அனுமதிக்கிறது.

எவ்வாறாயினும் இந்த விதியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

லண்டன் சிட்டி ஏற்கனவே விதிகளை விலக்கியுள்ளது, ஆனால் பர்மிங்காம் வழங்கும் 12 மில்லியனுடன் ஒப்பிடுகையில், வருடத்திற்கு நான்கு மில்லியன் பயணிகளுக்கு சிறிய அளவிலான சேவைகள் வழங்கப்படுகின்றன.

திரவ விதிகளை அளவிட சிடி ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. புதிய விதியின் கீழ் 200 மில்லிலீற்றர் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version