Site icon Tamil News

சிங்கப்பூரில் சிறுவர்களை பாதுகாப்பதற்காக அமுலாகும் புதிய நடைமுறை!

சிங்கப்பூர் பாதுகாப்பான இணையப் பழக்கவழக்கங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

பிள்ளைகள் இணையத்தில் செலவிடும் நேரத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் பெற்றோருக்கான அந்த வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.

Digital for Life இணையத்தளத்தில் வழிகாட்டி இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளின் இணைய விளையாட்டு நடவடிக்கைகள் பற்றிப் பெற்றோரிடையே விழிப்புணர்வு குறைவாய் இருப்பதாகத் தொடர்பு, தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 அக்டோபரிலிருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி வரை 800க்கும் அதிகமான இளையர்களிடமும் அவர்களின் பெற்றோரிடமும் அமைச்சு ஓர் ஆய்வு நடத்தியது.

20 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இளையர்கள் இணையத்தில் நேரம் கழிப்பது குறித்துப் பெற்றோரிடம் பொய் சொல்வதாக ஆய்வு காட்டியது. 10 பெற்றோரில் மூவர் மட்டுமே பிள்ளைகள் யாருடன் விளையாடுகின்றனர் என்பதை முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தனர்.

Exit mobile version