Site icon Tamil News

ஜெர்மன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான செயல்!

ஜேர்மன் பாராளுமன்றம் இன்று (21.03) அதன் முதலாவது செவி புலன் குறைப்பாடு உள்ள பாராளுமன்ற உறுப்பினரை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

இதை  பாராளுமன்ற அவையில் இடம்பெற்ற வலாற்று நிகழ்வாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

44 வயதான Heike Heubach, என்ற குறித்த நபர் தற்போது Uli Grötsch க்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்துறை மேலாளராகப் பின்னணியைக் கொண்ட ஹியூபாக், சக பணியாளர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார்.

ஹியூபாக் முதலில் முன் வரிசையில் இடம்பிடித்தபோது, ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளர் மேடைக்கு அருகில் நின்று விளக்கமளித்தார் என்று ஜெர்மன் செய்தி நிறுவனம் dpa தெரிவித்துள்ளது

Exit mobile version