Site icon Tamil News

ரயில் பயணத்தின் போது மொடல் அழகியிடம் சில்மிஷம்

ரயில் பயணத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவரிடம் சில்மிஷம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது ரயிலில் பயணம் செய்த இளையுர் மொடல் அழகியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பயத்துடனேயே பயணம் செய்த அந்த பெண், திருவனந்தபுரத்திற்கு சென்று இறங்கியதும் ரயில்வே பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முறைப்பாட்டிக் அடிப்படையில் ரயில்வே பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இவ்வழக்கு கோட்டயம் ரயில்வே பொலிசுக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் கொல்லத்தைச் சேர்ந்த அன்சர் கான் (வயது 25) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.

Exit mobile version