Site icon Tamil News

இலங்கையில் உயிரை காப்பாற்றிக் கொள்ள பொலிஸ் நிலையம் சென்றவர் மரணம்

மில்லனிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு வந்து, பொலிஸாரின் தலையீட்டில் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்டவர் மில்லனிய கிம்மன்துடாவ பிரதேசத்தை சேர்ந்த திருமணமானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையைச் செய்யப்பட்ட நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பணத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இதுவரை நடைபெற்ற விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மில்லனிய நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் மகேஷ சில்வா தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version