Site icon Tamil News

பாலியல் கோரிக்கைகளுக்கு அடிபணியாத ஆண் நபர்!! கொலை செய்து குளத்தில் வீசிய நண்பர்கள்

ஜெய்ப்பூர்- பாலியல் கோரிக்கைகளுக்கு அடிபணியாத 40 வயது ஆடவர் நண்பர்களால் கொல்லப்பட்டு அவரது உடலை குளத்தில் வீசினர்.

தேசத்தையே அதிர வைத்த கொலை சம்பவம் ஒன்பது நாட்களுக்கு முன் நடந்துள்ளது. பாரன் நகரைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பைரா என்பவர் கொல்லப்பட்டார். அவரது சடலம் குளத்தில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மது அருந்தும் போது, ​​இரண்டு நண்பர்கள் ஓம் பிரகாஷை பாலியல் கோரிக்கைகளுக்கு அடிபணியுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இதை எதிர்த்த ஓம் பிரகாஷ், அவரது நண்பர்களால் கொல்லப்பட்டார்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முரளிதர் பிரஜாபதி (32), சுரேந்திர யாதவ் ஆகியோர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பாரன் நகரைச் சேர்ந்தவர்கள்.

பிரஜாபதியை பொலிசார் கைது செய்தனர். பொலிஸ் விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சுரேந்திர யாதவ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

‘பிரஜாபதி, சுரேந்திர யாதவ், ஓம் பிரகாஷ் ஆகியோர் ஒன்றாக மது அருந்தினர். இதனிடையே ஓம் பிரகாஷிடம் இரண்டு பேர் உடலுறவு கொள்ள கேட்டுள்ளனர். ஆனால் ஓம் பிரகாஷ் மறுத்துவிட்டார்.

பின்னர் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதற்கிடையில் ஓம் பிரகாஷ் அவரது நண்பர்களால் கொல்லப்பட்டார். பின்னர், உடல் குளத்தில் வீசப்பட்டது’-  என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

Exit mobile version