Site icon Tamil News

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிர்மாய்ப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

இருபாலை பகுதியை சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த நபர் பிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக வசித்து வந்த நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

மரண விசாரணையின் போது , மனவிரக்தியில் காணப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version