Site icon Tamil News

ஒரு உயிரைப் பறித்த காதல் விவகாரம்

மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த தண்டெனிய வத்த பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் உறவு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இந்தக் கொலையைச் செய்துள்ளார், மேலும் உயிரிழந்தவர் ஹர்ஷன குமார என்ற 27 வயதுடையவர்.

இது தொடர்பான மோதலில் மற்றுமொருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞன் தனது மாற்றாந்தாய்டன் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதனால் ஏற்பட்ட பிரச்சனையால் கொலை நடந்துள்ளது. சந்தேக நபர் நாளை (13) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Exit mobile version