Site icon Tamil News

கந்தானையில் வீடொன்றை குறிவைத்து துப்பாக்கி பிரயோகம்!

கந்தானை பொல்பிதிமூகலான பிரதேசத்தில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று (05.10) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வீடு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு ரிவால்வர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version