Site icon Tamil News

கெய்ரோவிலிருந்து வெளியேறிய ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர்

போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த ஹமாஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர் என எகிப்திய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளன ர்.

காஸாவில் இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்துவது குறித்து கத்தார், எகிப்து ஏற்பாட்டில், எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்கைள் நடைபெற்றுவந்தன.

எனினும் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என எகிப்திய அரசாங்க வட்டாரமொன்று தெரிவித்ததாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, உடன்பாடொன்று ஏற்படும்வரை பேச்சுவார்த்தை தொடரும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Exit mobile version