Site icon Tamil News

ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்து – ரயிலுடன் மோதிய பேருந்து – 6 பேர் பலி

ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் பேருந்தும் ரயிலும் மோதிக்கொண்டதில் பேருந்தில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘யூரோசிட்டி 279’ என்ற பெயரிடப்பட்ட ரயில், தலைநகர் பிராட்டிஸ்லாவாவைக் கடந்து, ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டுக்கு எல்லையைக் கடக்கும் போது, ​​இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேருந்துடன் மோதிய ரயிலின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததாகவும் ரயிலின் சாரதி தீயில் சிக்கி தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் விபத்து சமிக்ஞை அமைப்பு பழுதடைந்ததாலும், புகையிரத கடவையின் கதவுகள் மூடப்படாததாலும் பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Exit mobile version