ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி நிலையிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
9 பேர் கொண்ட குழுவொன்று இந்த பயணத்தில் இணைந்துள்ளது.
அதன்படி, அவர்கள் இன்று அதிகாலை 12.55 மணி அளவில் தாய்லாந்தின் பெங்கொக் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் இடம்பெற்றுள்ளது.