Site icon Tamil News

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து : உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் பலர் பரிதாபமாக பலி!

கென்யாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் பலியாகினர்.

குறைந்தது 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நைரி கவுண்டியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா பிரைமரியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்படும்போது மாணவர்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், பலர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வில்லியம் ருடோ அதிகாரிகளுக்கு “இந்த கொடூரமான சம்பவத்தை முழுமையாக விசாரிக்கவும்” மற்றும் பொறுப்பானவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version