Site icon Tamil News

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து : 06 பேர் பலி!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த  தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், தீயை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

தீயின் நடுவில் தொழிற்சாலைக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் கடினமான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் அரச அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version