Site icon Tamil News

டெல்லி வஜிராபாத்தில் உள்ள பொலிஸ் பயிற்சி பள்ளியில் தீ விபத்து

டெல்லி – வஜிராபாத்தில் (Wazirabad) உள்ள பொலிஸ் பயிற்சி பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 கார்கள் மற்றும் 250 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

பொலிஸ் பயிற்சி பாடசாலையின் ‘மல்கானா’ எனப்படும் களஞ்சிய பகுதியில் நள்ளிரவு 12.16 அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் எட்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version