Site icon Tamil News

இலங்கையில் போலி தங்கத்தை பயன்படுத்தி வாடிகையாளர்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்!

இலங்கையில் போலி தங்கத்தைப் பயன்படுத்தி 19,670,000 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தங்கப் பொருட்கள் அடமானப் பிரிவின் அதிகாரி ஒருவரை பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

தனியார் நிதி நிறுவன மேலாளர் செய்த புகாரின் பேரில், போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் போது சந்தேகநபரிடம் இருந்து 41 போலி நகைகளான நெக்லஸ், மோதிரங்கள், வளையல்கள், பென்டன்ட்கள் என்பன காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிதி நிறுவனத்திற்கு பல்வேறு நபர்கள் வந்து நகைகளை அடகு வைத்த போது, ​​சந்தேக நபர் அவர்களிடம் போலி ஆவணம் தயாரித்து, ஆன்லைன் மூலம் போலி நகைகளை இறக்குமதி செய்து அந்தந்த கவர்களில் போட்டு உண்மையான தங்க பொருட்களை அடகு வைத்து பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பான வட்டியை சந்தேகநபர் அதன் உரிமையாளர்களின் பெயரில் செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

Exit mobile version