Site icon Tamil News

மொட்டுக்கட்சியின் ஒரு தரப்பினர் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலுக்கு மகிந்த அளுத்கமகே, திலும் அமுனுகம, காஞ்சன விஜேசேகர, எஸ். பீ திஸாநாயக்க, லொஹான் ரத்வத்த, கீதா குமாரசிங்க, அலி சப்ரி உள்ளிட்ட பெரும் பாரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மொட்டுக்கட்சியின் ஆதரவைப் பெற முயற்சிப்பதாக எம்.பி.க்கள் மேலும் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தின் பின்னர், இந்த கலந்துரையாடலுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதுடன், இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் உட்பட ஏறக்குறைய 70 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகத்தில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version