Site icon Tamil News

பிரித்தானியாவில் பெண்ணின் உயிரை பறித்த வளர்ப்பு நாய்

பிரித்தானியாவில் உள்ள கொவெண்ட்ரி (Coventry) நகரில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தாக்கிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Wexford ரோட்டில் இருக்கும் கட்டடத்தில் அந்தச் சம்பவம் நேர்ந்தது. அதில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கட்டடத்தினுள் அந்தப் பெண் கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டார். பொலிஸ் அதிகாரிகளின் உதவியோடு அவர் சீக்கிரம் வெளியே கொண்டுவரப்பட்டார்.

அவருக்கு உயிர்க்காப்பு சிகிச்சை வழங்கப்பட்டும் பலனில்லை. பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நாயை அதிகாரிகள் கைப்பற்றினர். பெண்ணின் மரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.

Exit mobile version