Site icon Tamil News

இலங்கையில் மர்மமான முறையில் வைத்தியர் ஒருவர் உயிரிழப்பு!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்ற 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியரின் மனைவியும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஆவார். சம்பவம் இடம்பெற்ற போது வைத்தியர் வீட்டில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய சட்ட வைத்திய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காலி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version