Site icon Tamil News

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில், குறித்த சடலம் இன்று (23.09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய உத்தமன் என்பவர் ஆவார்.

மல்லாவி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version