Site icon Tamil News

உகாண்டாவில் இராணுவத்தின் உயர்மட்ட தளபதி பதவியில் மாற்றம்!

உகாண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி தனது மகனை இராணுவத்தின் உயர்மட்ட தளபதியாக நியமித்துள்ளார்.

முசெவேனியின் மகன், ஜெனரல் முஹூசி கைநெருகபா, சமீபகாலமாக நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகிறார்.

இராணுவ அதிகாரிகள், கட்சிசார்ந்த அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டத்தை மீறி பேரணிகள் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் கைநெருகபா மக்களிடையே தேசபக்தியை வளர்க்கும் விதமாக மேற்படி பேரணிகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வியாழன் பிற்பகுதியில் கைநெருகாபா தனது புதிய பதவிக்கு பதவி உயர்வு பெற்றதாக இராணுவ அறிக்கை கூறுகிறது.  அரசாங்க அமைச்சர்களின் மறுசீரமைப்பில் அவரது நெருங்கிய ஆலோசகர்கள் இவருக்கு குறித்த பதவியை வழங்கியுள்ளனர்.

Exit mobile version