Site icon Tamil News

துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு!

காலியில் இன்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி – டிக்ஷன் வீதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உந்துருளியில் பயணித்த இருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version