Site icon Tamil News

பாகிஸ்தானில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து : 17 பலி!

தென்மேற்கு பாகிஸ்தானில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈத் அல்-பித்ர் கொண்டாட்டங்களின் முதல் நாளாகவும், பாகிஸ்தானில் பொது விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை பிற்பகுதியில் பலுசிஸ்தானில் உள்ள ஒரு வழிப்பாட்டு தலத்திற்கு யாத்திரீகர்களை அழைத்துச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியது.

பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் மொத்தமாக 60 பேர் பயணித்த நிலையில், அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த  15 பேர் அண்டை மாநிலமான சிந்து மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version