Site icon Tamil News

சீனாவில் சுரங்கப்பாதை சுவரில் மோதிய பேருந்து : 14 பேர் பலி!

வடக்கு சீனாவில் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சுரங்கப்பாதைச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள லின்ஃபென் நகரில் ஹோஹ்ஹோட்-பீஹாய் விரைவுச் சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தில் 51 பேர் பயணித்த நிலையில், அவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன்,   37 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version