Site icon Tamil News

பெருவில் இசைக் குழுவினரை பலிகொண்ட பேருந்து விபத்து : பலர் படுகாயம்!

பெருவில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இசை குழுவொன்றை சேர்ந்த 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மொத்தமாக 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் ஆன்டோலாக் எ டெல் ஃபோக்லோர் இசைக்குழுவின் எட்டு உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர் ஓட்டுனர் ஆகியோர் அடங்குவர்.

ஒக்ஸாபம்பா நகரிலிருந்து பெருவின் தலைநகரான லிமாவுக்குப் பயணித்த குழுவினர் டார்மா நகருக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version