Site icon Tamil News

பாகிஸ்தானில் பேருந்து விபத்து – 28 பேர் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும், காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பலுசிஸ்தான் மாகாணத்தின் தர்பத் நகரில் இருந்து குவெட்டா நகருக்கு நேற்று (29ம் தேதி) சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

நெரிசல் மிகுந்த மலைப்பாதையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ​​அதன் முன்பக்க டயர் திடீரென வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புச் சுவரில் மோதி சுமார் 50 அடி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்தில் பலியானவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப்பும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version