Site icon Tamil News

ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நேற்று முன்தினம்(28) மாலை நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கிய15 வயது சிறுவனின் சடலம் . மீட்கப்பட்டுள்ளது.

செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (15வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட 5 பேர் நண்பர்கள் கடலில் நீராடச் சென்றுள்ளனர்.

சடலம் இன்று மாலை 7.00 மணியளவில் கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் – கரைக்கு எடுத்து வந்ததுடன் , சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் – திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் , சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Exit mobile version