Tamil News

கென்யாவில் உணவகம் ஒன்றில் வெடித்த வெடிகுண்டு – பொலிஸ் அதிகாரி உட்பட நால்வர் பலி!

வடகிழக்கு கென்யாவில் உள்ள மண்டேரா நகரில் உள்ள பொலிஸ் நிலையம் அருகே ஒரு உணவகம் உள்ளது. அந்த உணவகத்தில் நேற்று காலை திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த விபத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

An explosion near a police station in northern Kenya has killed 4 people,  including 3 officers

இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த பொலிஸார் வெடிகுண்டு வெடித்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மண்டேரா பொலிஸ் தலைமை அதிகாரி சாம்வெல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version