Site icon Tamil News

கொழும்பில் முச்சக்கரவண்டியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்

கொழும்பு 07, வோர்ட் பிளேஸில் முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குருதுவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 119 தொலைபேசி செய்தியின் பிரகாரம் வோர்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

குறித்த முச்சக்கரவண்டியின் இலக்கத்தை பொலிஸார் மோட்டார் வாகன திணைக்களத்திடம் வினவிய போது அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டியின் உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியை தனது மைத்துனருக்கு வாடகை வாகனம் நடத்துவதற்காக வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருதுவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version