Site icon Tamil News

இலுக்பதன பிரதேசத்தில் நீரில் மூழ்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு

பதுரலிய, இலுக்பதன பிரதேசத்தில் அமைந்துள்ள உல்லாச விடுதியின் நீர் தடாகத்தில் நீராடச் சென்ற 6 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சிறுமி தமது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழுவுடன் விடுதியில் இருந்த போது விபத்துக்குள்ளானார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version