பனாமா-கோஸ்டாரிகா எல்லைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
GFZ தரவுகளின்படி, நிலநடுக்கம் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் இருந்தது.
பனாமா மற்றும் கோஸ்டாரிகாவைச் சேர்ந்த உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக எந்த சேதம் குறித்தும் தகவல் வழங்கவில்லை .
பனாமா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் கழகத்தின் படி, இரண்டு மத்திய அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில், புவேர்ட்டோ ஆர்முல்லெஸ் நகருக்கு தென்கிழக்கே சுமார் 7 கிமீ (4 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.