உலகம்

காங்கோவில் எபோலா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த கூடாரங்களுக்கு தீ வைப்பு!

காங்கோவில் எபோலா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்த கூடாரம் ஒன்று நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தை தொடர்ந்து அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 18 நோயாளிகள் வெளியேறியுள்ளனர்.

நோயாளிகள் சிகிச்சைப் பெறும் கூடாரங்கள் தீக்கிரையாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

அதிக தொற்றுத்தன்மை கொண்ட எபோலா நோயாளிகளின் உடல்களைக் கையாள்வதற்கான கடுமையான நெறிமுறைகள் காரணமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நெறிமுறைகள் பாரம்பரிய அடக்கச் சடங்குகளைத் தடுக்கின்றன.

அரிய வகை புண்டிபுக்யோ வைரஸ் பரவல் காரணமாக, உலக சுகாதார அமைப்பு காங்கோவிற்கான அபாய நிலையை ‘மிக அதிகம்’ என உயர்த்தியுள்ளது.

அங்கு 82 நோய்த்தொற்றுகளும் 07 இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!