Site icon Tamil News

தமிழகத்தில் அகதிகளாக தங்கியுள்ள 92 ஆயிரம் இலங்கையர்கள்!

இலங்கியில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக தமிழகத்தில் சுமார் 92 ஆயிரம் இலங்கையர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், 92435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியேயோ தங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருவதாகவும் அதில், 19046 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 435 பேர் தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேநேரம் இந்தியாவின் பிற பகுதிகளிலும், 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரம் இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version