Site icon Tamil News

இந்தியாவுக்கு தங்கத்தை கடத்திய 9 பேர் அதிரடியாக கைது!

இந்தியாவுக்கு தங்கத்தைக் கடத்திய 9 பேர் சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை, சிங்கப்பூர் மற்றும் டுபாய் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 9 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோகிராம் தங்கத்தை இந்திய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

Exit mobile version