Site icon Tamil News

இந்தியாவை உலுக்கிய தீ விபத்து – 12 சிறுவர்கள் உட்பட 27 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தையடுத்து, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீயில் சிக்கியவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளதோடு, நிவாரணப் பணிகளை விரைவில் வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version