2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட உள்ளது.
அதற்கமைய, தேர்தல் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடும் பொலிஸார், அரச அச்சகம், தபால் திணைக்களம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் குறித்து விவாதிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 84 அரசியல் கட்சிகள் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.