Site icon Tamil News

இந்தியாவில் பேருந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் – பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் சிர்ஹிந்த் ஃபீடர் கால்வாயில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து இடம்பெறும் போது, பேருந்தில் சுமார் 35 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வார்ரிங் கிராமத்தைச் சேர்ந்த ராஜா கூறுகையில், “இந்த கால்வாயில் பாலத்தின் மீது கட்டப்பட்ட சாலையின் நிலை திருப்திகரமாக இல்லை, மேலும் சில நீர்நிலைகளும் இருந்ததால் இந்த துயர விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

Exit mobile version