Site icon Tamil News

இஸ்ரேல் குண்டுவீச்சில் சிறைபிடிக்கப்பட்ட 7 பேர் பலி: ஹமாஸ் தெரிவிப்பு

முற்றுகையிடப்பட்ட பகுதியின் மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதன் விளைவாக காஸா பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய குழு ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதல்களின் போது சுமார் 250 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஹமாஸ் கைப்பற்றியது, அவர்களில் சுமார் 130 பேர் இன்னும் சிறைபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கைதிகளில் மூவர் அடையாளம் காணப்பட்டதாக கஸ்ஸாம் படைப்பிரிவு கூறியது, ஆனால் ஏழு பேரும் எப்போது இறந்தார்கள் என்பதை அது தெளிவுபடுத்தவில்லை.

மேலும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக கொல்லப்பட்ட பணய கைதிகளின் மொத்த எண்ணிக்கை “70 ஐ தாண்டியிருக்கலாம்” என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version