Site icon Tamil News

தென் கொரியாவில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி , 11 பேர் காயம்

தென் கொரியாவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சியோலுக்கு தெற்கே உள்ள புச்சியோனில் உள்ள ஒன்பது மாடி ஹோட்டலின் எட்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

46 தீயணைப்பு வாகனங்களும் 150 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீ அணைக்கப்படாததால் அதிக உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்படக்கூடும் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version