Site icon Tamil News

மெக்சிகன் கும்பல் வன்முறையில் 6 பேர் பலி

கும்பல் வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கு மெக்சிகோவின் ஜலிஸ்கோ பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, குற்றக் கும்பல்களுக்கிடையிலான வன்முறை காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Exit mobile version