Site icon Tamil News

இலங்கையில் 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை

இலங்கையில் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் 2015ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரையில் 63,917 பேர் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், அமைச்சர் திரன் அலஸ் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.

2015ஆம் ஆண்டில் 17,126 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2019 இல் 8,702 மற்றும் 2020 இல் 3,988 விண்ணப்பங்கள் செய்யப்பட்டன. 2015 முதல் 2020 வரையிலான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 63,917 ஆகும்.

மேலும், 2015ஆம் ஆண்டு 16,184 விண்ணப்பதாரர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு 13,933 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு 8,881 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் 2018ஆம் ஆண்டு 8,747 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு 7,405 வழங்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு 3154 பேருக்கு வழங்கப்பட்டது. அதன்படி, 2015 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version