Site icon Tamil News

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 56 மத குருமார்கள் சிறையில்! வெளியான அதிர்ச்சி தகவல்

கொலை, பலாத்காரம், பாரிய பாலியல் துஷ்பிரயோகம், பணமோசடி மற்றும் புதையல் தோண்டல் ஆகிய குற்றச்சாட்டில் 56 மதகுருமார்கள் சிறையில் உள்ளதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜயரத்ன மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

”இவர்களில் 29 பௌத்த தேரர்கள், 03 இந்து மதகுருமார்கள், 02 மௌலவிகள் கைதிகள் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,

19 பௌத்த தேரர்கள் மற்றும் 01 கத்தோலிக்க மதகுருமார்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

மேலும், 2 பௌத்த தேரர்களும், 01 இந்து குருக்களும் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 01 கத்தோலிக்க பாதிரியார் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டில் 2 தேரர்களும் 1 இந்து மதகுருவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 03 பௌத்த தேரர்கள் சிறையில் உள்ளனர். கொடூர பாலியல் குற்றச்சாட்டுடன் 02 பௌத்த தேரர்கள் சிறையில் உள்ளனர்.

இந்த குற்றச்சாட்டில் இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள் சேர்க்கப்படவில்லை. சிறார்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 பௌத்த தேரர்களும் 01 இந்து மதகுருமார்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

48 பௌத்த தேரர்கள், 03 இந்து குருக்கள், 01 மௌலவிகள் மற்றும் 04 கத்தோலிக்க மதகுருமார்கள் இந்த சிறைகளில் கைதிகளாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version