Site icon Tamil News

தனிநபர்களின் பாதுகாப்பிற்காக 5,400 பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம்!

அமைச்சர்களாகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ இல்லாத தனிநபர்களின் பாதுகாப்பிற்காக மொத்தம் 5,400 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம்  இன்று (06) கூடிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு விவரங்கள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடையங்களுக்கு அமைய தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Exit mobile version