Site icon Tamil News

ரஷ்ய போரில் 500 குழந்தைகள் பலி!!! உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவுடனான போர் தொடங்கியதில் இருந்து சுமார் 500 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேலும் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ரஷ்ய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தரவுகளை உக்ரைன் அரசு சேகரித்துள்ளது.

யுத்தத்தின் போது 9,396 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 16,646 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version