Site icon Tamil News

50 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முறியடித்த உக்ரைன் : உச்சக்கட்ட போர் பதற்றத்தில் பக்முட்!

கடந்த 24 மணி நேரத்தில் 50 மேற்பட்ட ரஷ்ய தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி ரஷ்யா நான்கு ஏவுகணைத் தாக்குதகல்கள், 40 வான்வழித் தாக்குதல்கள், ரொக்கெட் சால்வோ அமைப்புகளின் 58 தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஏவுகணைத் தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள் என்பன தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்றும் பொதுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே உக்ரேனிய வான் பாதுகாப்பு படை ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியில் 12 தாக்குதல்களை மேற்கொண்டதுடன், 14 போர் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

Exit mobile version