Site icon Tamil News

சிங்கப்பூரில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட 5 வாகனங்கள்

சிங்கப்பூரில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

56 வயதான ட்ரக் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் ஜனவரி 29ஆம் தேதியன்று பிற்பகல் Choa Chu Kang Way இல் நடந்தது.

இந்த விபத்து குறித்து பிற்பகல் 2 மணி அளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் மூன்று கனரக வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மோதிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர்கள் கூறினர்.

Exit mobile version