Site icon Tamil News

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலியாகினர்

குவைத்தில் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குவைத்தின் தெற்கு மங்காப் பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் இந்தியர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 160 ஊழியர்கள் அங்கு வசித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version